Monday 30 November 2015


கடிகார கலாட்டா

ஒன்று

இவர்:  ஏங்க, மணி என்னங்க ஆவுது?


அவர்  (சற்றே இழுத்தாற்போல)  அஞ்சி… பத்து…


இவர் சீச்சீ…. என்னைய்யா,  மணி கேட்டா அஞ்சி பத்துன்னு இழுக்கிறே?


அவர்:  அய்யே, வள்ளல் பரம்பர,  மூஞ்சியப் பாரு,  மணி அஞ்சி பத்துன்னு சொன்னேன்யா.


இரண்டு:


இவர்: ஏங்க,மணி என்னங்க ஆவுது?

அவர்:  பத்து பத்து.

இவர்:  ஒரு தரம் சொன்னா போதும். நான் ஒன்னும் செவிடு இல்ல.

அவர்:  அட புத்திசாலியே, பத்து மணி பத்து நிமிஷம்னு சொன்னேன்.


மூன்று: 


இவர்: ஏங்க,மணி என்னங்க ஆவுது?

அவர்: ஃபோர் ட்வெண்டி

இவர்: ஏய்,மரியாதயா பேசு, யாரப் பாத்து ஃபோர் ட்வெண்டி எங்கிறே?

அவர்: அய்யா சாமி, மணி நாலு இருபதுனு இங்கிலீஷ்ல சொன்னேன்.


நான்கு:


(ஒரு பெண் கூடையில் எதையோ எடுத்துக் கொண்டு வருகிறார். எதிரே மூவர் வருகின்றனர். மூவரும் ஒரே சமயத்தில் அவரிடம் கேள்வி கேட்கின்றனர்)

ஒருவர்: கூடையில் என்ன?

மற்றவர்:  மணி என்ன?

மூன்றாமவர்: உன் பேரென்னம்மா?

கூடை வைத்திருப்பவர்:  ஆரஞ்சு.

ஒருவர்: என்ன, மூனு பேருக்கும் ஒரே பதில் சொல்றீங்க?

கூடை வைத்திருப்பவர்:  கூடையில் இருப்பது ஆரஞ்சு பழம். மணி ஆறு அஞ்சி ஆவுது. என் பேரு ஆர். அஞ்சு.அதான் மூனு பேருக்கும் ஒரே பதில் சொன்னேன்.



Monday 11 July 2011

Experience, the best teacher

It is good for me
That I have been afflicted.
I used to be badly pessimistic
Enjoyed and indulged in
Self pity and negative thoughts.
The Lord said 'Yes' to
My every negative thought.
The thing I had greatly feared
Came upon me.
I was forced to think positively.
Now, I'm enjoying its fruits.
Experience brings a change of heart.